கையடக்க தொலைபேசிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறை ஆரம்பம்!

கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும் அது கையடக்க தொலைபேசிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் சாரதி அனுமதிப்பத்திர அட்டை தேவைப்படுபவர்கள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாரதி … Continue reading கையடக்க தொலைபேசிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறை ஆரம்பம்!